கிருஷ்ணகிரி,மார்.26- கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம்
தாம்சன் பேட்டையை
சோந்தவர் தொழில் அதிபர் கே.வி. சண்முகம் அவர்களின் மனைவியும்
அகில இந்திய காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கே.வி. எஸ். தணிகாசலம், கே.வி.எஸ்.திருநாவுக்கரசு, திமுக மாநில வர்த்தக அணியின் மாநில துனைச் செயலாளர் கே.வி.எஸ்.
சீனிவான் ஆகியோரின் தாயார் ராஜம்மாள் கடந்த 22-ம் தேதி காலமானார்.
இதனை அடுத்து ராஜம்மாள் சண்முகம் ஆகியோரின் நினைவேந்தல் மற்றும் திருஉருவப் படம் திறப்பு விழா நடைப்பெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் தமிழக காங்கிரஸ் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான
கே.வி, தங்கபாலு அவர்கள் கலந்துக் கொண்டு ராஜம்மாள் மற்றும் சண்முகம் ஆகியோரின் திருஉருப்படங்களுக்கு மாலை அணிவித்து மலர் தூவியும் மரியாதை செலுத்தினார், குடுபத்தினர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அப்போது காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினரும் முன்னாள் கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைரும்மான
எல் சுப்பிரமணியன், முன்னாள் மாவட்ட தலைவர் ராஜாகுமாரவேல், கலைபிரிபு மாவட்ட தலைவர் கோவிந்தசாமி, முன்னாள் அகில இந்திய காங்கிரஸ் கட்சி உறுப்பினர் முத்துகுமார் ஆகியோரும் மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
மேலும் இதே போல
முன்னாள் நகர தலைவர் தக்காளி தவமணி, காங்கிரஸ் கட்சியின் தொழிலாளர் அணி மாவட்ட தலைவர் ராமசந்திரன், கவுசிலர் இராதாகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் கோவிந்தன், மற்றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த செல்வராஜ்,
டேம் சக்கரவர்த்தி, தேவேந்திரன், சத்தி உள்ளிட்ட ஏராளமானகள் இந்த நிகழ்ச்சியில் கலந்துக் கொண்டு மலர் தூவி மதியாதை செலுத்தினார்கள்.



