தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி சாலை முனிசிபல் காலனி 10ம் தெரு நுழைவுப்பகுதியில்
முனிசிபல் காலனி குடியிருப்போர் நலச்சங்கம்,மாநகராட்சி குடியிருப்போர் நலச்சங்க
கூட்டமைப்பு மற்றும்
ஸ்ரீகுமரன் மருத்துவமனை ஆகியன சார்பில் அமைக்கப்பட்டுள்ள பேருந்து நிழற்குடை திறப்பு விழா நடந்தது
தமிழ்நாடு சிவில் சப்ளை கார்ப்பரேசன் தர கட்டுப்பாடு முன்னாள் அலுவலரும், ஆலோசகரும்,மாநகராட்சி குடியிருப்போர் நலச்சங்க
கூட்டமைப்பு துணை தலைவரு மான வி.மன்னன் உமாசங்கர் தலைமையில் நடைப்பெற்றது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து முன்னாள் உதவி மேலாளரும் முனிசிபல் காலனி குடியிருப்போர் நலசங்க செயலாளரும்,மாநகராட்சி குடியிருப்போர் நலச்சங்க
கூட்டமைப்பு தலைவருமான ஜெ.சந்திரமோகன் வரவேற்புரை யாற்றினார்.
தஞ்சாவூர் சட்டமன்ற உறுப்பினர் டி.கே.ஜி. நீலமேகம் கலந்து கொண்டு நிழற்குடை திறந்து வைத்து வாழ்த்துரையும் மாநகராட் சி மேயர் சண்.இராமநாதன் முன்னிலை வகித்து,வாழ்த்துரை யும், மாநகராட்சி 49வது வார்டு நகரமன்ற உறுப்பினர்
டெய்சிராணி பெரியசாமி, தமிழ்நாடு அரசு போக்குவரத்து வணிக துணை மேலாளர் எஸ்.ராஜேஷ், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை காவல் ஆய்வாளர் வி.சந்திரா ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரையாற்றினர். மாவட்ட நல்லோர் வட்ட பொறுப் பாளர் பி.சிவசண்முகம்
நன்றியுரையாற்றினார்.
ஸ்ரீகுமரன் மருத்துவமனையில் இலவச மருத்துவ முகாம் நடைபெற்றது இதில் 100 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.