கிருஷ்ணகிரி ஜூன்23: கள்ளக்குறிச்சியில் கடந்த இரு தினங்களுக்கு முன் கள்ளசாராயம் அருந்திய 52க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர். கள்ள சாராயத்தை தடுக்க முடியாத திமுக அரசை கண்டித்து கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் கிருஷ்ணகிரி அண்ணா சிலை அருகே மாவட்ட தலைவர் சிவப்பிரகாசம், மாநிலத் துணைத் தலைவர் கே.எஸ்.நரேந்திரன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் திமுக அரசை கண்டித்தும், முதல்வர் பதவி விலக கோரியும், பதாகைகள் கையில் ஏந்தியவாறு கோஷங்கள் எழுப்பினர். அனுமதி இன்றி நடத்திய இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட பாஜகவினரை கைது செய்து, வாகனம் மூலம் தனியார் மண்டபத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு மாநில துணைத்தலைவர் கே.எஸ்.நரேந்திரன், மாவட்ட தலைவர் கே.ஜி.சிவப்பிரகாஷ், மாவட்ட பொதுச் செயலாளர் கோவிந்தராஜ், மாவட்ட பொருளாளர் கவியரசு, மாவட்ட துணைத் தலைவர் எம்.ஆர்.ராஜேந்திரன், நகரத் தலைவர் கவுன்சிலர் சங்கர், மாவட்ட மகளிர் அணி தலைவி விமலா, மாவட்ட மகளிர் அணி துணை தலைவி ஜெயலட்சுமி, மாவட்ட துணை தலைவர்கள் மின்னல் சிவா, செந்தில், மன்னன் சிவா, மாவட்டச் செயலாளர் டெம்போ முருகேசன், கிருஷ்ணகிரி கிழக்கு ஒன்றிய தலைவர் ரமேஷ், கார்த்தி, உள்பட 100க்கும் மேற்பட்ட மாவட்ட, ஒன்றிய, நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் கிருஷ்ணகிரி டிஎஸ்பி தலைமையில் 50க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.



