மயிலாடுதுறையில் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள் 400 பேருக்கு பிரியாணி விருந்து.
தமிழக வெற்றி கழகம் தொடங்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்ததை தொடர்ந்து இரண்டாம் ஆண்டு தொடக்க விழா அக்கட்சியினரால் பல்வேறு இடங்களில் கொண்டாடப்பட்டது. அந்த வகையில் மயிலாடுதுறையை அடுத்த பல்லவராயன் பேட்டை கிராமத்தில் 2ஆம் ஆண்ட தொடக்கவிழா கொண்டாட்டமாக பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மக்கள் 400 பேருக்கு கட்சியின் சார்பில் மதிய விருந்தாக பிரியாணி பரிமாறப்பட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. கட்சியின் மாவட்ட செயலாளர் குட்டி கோபி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு விழா ஏற்பாட்டாளர் மயிலாடுதுறை நகர பொறுப்பாளர் ராஜ்குமார், ஒன்றிய செயலாளர்கள் ரமேஷ், மனோகர், பாண்டி நடராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் குட்டி கோபி பொது மக்களுக்கு விருந்து பரிமாறி அவர்களுடன் சேர்ந்து உணவருந்தினார். தொடர்ந்த 100 பேருக்கு வேட்டி, 100 பேருக்கு சேலைகளையும், மாணவ மாணவிகளுக்கு நோட்டு பேனாக்களை நலதிட்ட உதவியாக குட்டிகோபி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொறுப்பாளர் அறிவரசன், மாவட்ட செயற்குழு அபிராமி, ராஜ், ரம்யா, ஜாஸ்மின், நடராஜ், கே.கே ஜியாவூதின், மாணவரணி சதீஸ், பிரபஞ்சன், மற்றும் பொறுப்பாளர்கள் ஆசிப், விஷால், ஆகாஷ், மொஹித், தமிழ் சிக்கந்தர், சரண், சதீஷ், சுதாகர், மணிகண்டன் உள்ளிட்ட பலர் கலந்த கொண்டனர்.