தஞ்சாவூர், மார்ச்.23
தஞ்சாவூர் மாநகராட்சியில் பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள் விண்ணப் பித்த 7 நாட்களுக்குள் இல்லம் தேடி தபாலில் வந்து சேரும் புதிய நடைமுறையை
மேயர் சண் ராமநாதன் தொடங்கி வைத்தார்.
தஞ்சாவூர் மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் 50-க்கும் மேற்பட்ட தனியார் மருத்துவமனைகளும், 6 அரசு மருத்துவமனைகளும் உள்ளன. மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கான பிறப்பு சான்றிதழ்களும், இறப்பவர்களின் சான்றிதழ்களும் மாநகராட்சி வழங்கி வருகிறது. உரிய ஆவணங்களோடு விண்ணப் பித்தால், 15 நாட்களுக்குள் அதற்கான சான்றிதழ் மாநகராட்சி சார்பில் வழங்கப்படுவது வழக்கம்.
பொதுமக்கள் அலைச்சலை தடுக்கும் வகையில் சான்றிதழ் விண்ணப்பித்த 7 நாட்களுக்குள் சான்றிதழ்கள் பதிவு தபாலில் இல்லம் சென்று சேரும் வகையில் புதிய நடை முறையை தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் மேயர் சண்.ராமநாதன்
30 பேருக்கு வழங்குவதற்கான பிறப்பு சான்றிதழ்கள் கொண்ட
பதிவு தபால் கவர்களை
தபால் ஊழியர்களிடம் வழங்கி தொடங்கி வைத்தார்.
துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநகர நலஅலுவலர் நமச்சிவாயம், மண் டலகுழுத் தலைவர்கள் புண்ணியமூர்த்தி, கலையரசன், ரம்யா சரவணன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
மேயர் சண்.ராமநாதன் செய்தியாளர்களிடம் கூறியதாவது,தஞ்சாவூர் மாநகராட்சி அலுவலகத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தவர்கள் அலுவலகம் வந்து அலையாமல் இருப்பதற்காக புதிய நடைமுறையை தொடங்கி இருக்கிறோம். விண்ணப்பித்த 7 நாட்களுக்குள் பதிவு தபாலில் இந்த சான்றிதழ்கள் அனுப்பி வைக்கப்படும். அதேபோல் அடுத்த மாதம் (ஏப்ரல்) 1-ந்தேதி முதல் சொத்துவரி பெயர் மாற்றம். மாநகராட்சியின் அனைத்து பிற சான்றிதழ்களும் பதிவு தபால் மூலம் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.தஞ்சாவூர் மாநகராட்சி நடப்பு ஆண்டுக்கான சொத்துவரி வசூலில் முதல்நிலை இலக்கை நோக்கி செயலாற்றி வருகிறது. கடந்த மார்ச் 12-ந்தேதி வரை ரூ.23 கோடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டதில், ரூ.20.11 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. இது 92.3 சதவீதம் வசூல் ஆகும் என கூறினார்.