இராமேஸ்வரம், நவ. 06 –
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் ரயில் பாலத்தில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பாபர் மசூதி இடிப்பு தினத்தை முன்னிட்டு நாட்டின் பல்வேறு சுற்றுலா இடங்கள் கோவில்கள் மற்றும் மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பானது போடப்பட்டுள்ளது.
இதனை முன்னிட்டு ராமேஸ்வரம் அடுத்த பாம்பன் புதிய ரயில் பாலத்தில் ரயில்வே காவல்துறையினர் துப்பாக்கி ஏந்தி தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வெடிகுண்டு சோதனை செய்யும் கருவியை கொண்டு சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும், ரயில் பாலத்தில் ரயில்வே ஊழியர்கள் தவிர அன்னியர்கள், மீனவர்கள் செல்ல வேண்டாம் என போலீஸார் எச்சரித்துள்ளனர். இதேபோல் ராமேஸ்வரம், ராமநாதபுரம், பரமக்குடி உள்ளிட்ட ரயில் நிலையங்களிலும் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.



