மயிலாடுதுறை மாவட்டத்தில் வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் பொது மக்களுக்கு சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறையில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகம் வளாகத்தில் சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலர் (பொறுப்பு) ஈஸ்வரமூர்த்தி உத்தரவின் பேரில் மோட்டார் வாகன ஆய்வாளர் ராம்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு முகாமில் சாலையில் நடந்து செல்லக்கூடிய விதிமுறைகள் பற்றியும், சாலைகள் பற்றியும், எல் இ டி திரையில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இதில் ஓட்டுநர் உரிமம் பெற வந்திருங்க விண்ணப்பதாரர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்துகொண்டனர்.



