திருப்பத்தூர்: நவ:15, திருப்பத்தூர் மாவட்ட அலுவலக வளாகத்தில் குழந்தைகள் தினத்தை கொண்டாடும் வகையில் குழந்தைகள் பாதுகாத்தல் குறித்த தகவலினை பொதுமக்கள் அறிந்திடும் வண்ணம் பதாகைகள் ஏந்திய விழிப்புணர்வினை மாவட்ட ஆட்சித் தலைவர் தர்ப்பகராஜ்இ.ஆ.ப, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரேயா குப்தா இ.கா.ப ஆகியோர் கொடியசித்து துவக்கி வைத்தனர்.
மாவட்ட ஆட்சித் தலைவர் கட்டிட வளாகத்தில் தொடங்கி முக்கிய பிரதான சாலையில் சென்று தூய நெஞ்சக் கல்லூரி வரை பேரணியாக சென்றனர். பேரணியில் தனியார் செவிலியர் கல்லூரி மாணவ மாணவிகள், SRDPS ஆதரவற்றோர் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு இல்லத்தினர், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்நிகழ்வினை திருப்பத்தூர் மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவை துறை- மாவட்ட குழந்தைகள் நல பாதுகாப்பின் கீழ் குழந்தைகளின் உரிமைகளை பொதுமக்கள் அறிந்திடும் வண்ணம் ஏற்பாடு செய்திருந்தனர். பேரணியை கொடியாசித்து துவக்கி வைக்கும் போது குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவை துறை அலுவலர் அஜய் கமல், மக்கள் செய்தி தொடர்பாளர் சுப்பையா, SRDPS நிறுவனர் தமிழரசி, தனி அலுவலர் மங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடன் இருந்தனர். பேரணியில் அதிர்வு கிராமிய கலை குழுவின் சார்பில் ஊர்வலமாக சென்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.