மதுரை ஏப்ரல் 16
மதுரை விமான நிலையத்தில்
திருநெல்வேலி செல்வதற்காக
சென்னையிலிருந்து விமான மூலம் மதுரை
வந்த பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்
செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:
அமைச்சர் பொன்முடிக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடுபவர்களை காவல்துறை கட்டுப்படுவது குறித்த கேள்விக்கு:
ஜனநாயக நாட்டில் போராட்டத்தை யாரும் தடுக்க முடியாது. பேச்சு சுதந்திரம் மிகப்பெரியது. இதனை அடக்குமுறை செய்வது கண்டிக்கத்தக்கது.
ஆளுநரை சந்திக்க நேரம் கேட்டதாக சொல்லப்படுவது குறித்து:
அப்படி வந்த செய்தி புரளி
மாநில சுயாட்சி குறித்த கேள்விக்கு:
1969 இல் கலைஞர் ஒரு அறிக்கை கொடுத்தார் அதன் அடிப்படையில் அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி எழுதிய கடிதத்தில் பதில் கூறவில்லை. இருந்தாலும் கூட இன்று அதையெல்லாம் சுட்டிக்காட்டி பெரிதாக்க அவசியம் இல்லை.
நீட் தேர்வு முடிந்து போனது. நீட் மற்றும் ஜிஎஸ்டி காங்கிரஸ் காலத்தில் யோசிக்கப்பட்டது, பிஜேபி காலத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது.
தற்போது சுயாட்சி என்பது அவர்களின் பிரச்சனையை மறைப்பதற்காக எடுக்கிறார்கள்.
கல்லூரி விழாவில் மாணவர்களிடம் ஆளுநர் ஜெய் ஸ்ரீ ராம் என்று கூறியது குறித்த கேள்விக்கு:
ஆளுநர் என்ன பேசினார் என்பது தெரியவில்லை. அதை பார்த்து விட்டு பதில் சொல்கிறேன்.
தமிழ்நாட்டில் எது ஒழுங்காக நடைபெறுகிறது. தமிழகத்தில் இளைஞர்கள் கஞ்சா பழக்கத்திற்கு அடிமையாக சீரழிந்து வருகிறார்கள் இதனால் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகிறது.
அதனை கட்டுப்படுத்த தமிழக அரசு தவரி வருகிறது.
அதிமுக பாஜக கூட்டணி குறித்து அதிமுக தொண்டர்கள் கூறுவது குறித்த கேள்விக்கு:
பொள்ளாச்சி ஜெயராமனிடம் இன்று பேசினேன் அவர் எனக்கும் சீனியர் அதிமுக கிளைச்செயலாளர் வரை எனக்கு தெரியும் நீங்கள் சொல்வதை என்னால் நம்ப முடியவில்லை.
நெல்லையில் பள்ளி மாணவன் தாக்குதல் குறித்த கேள்விக்கு:
நெல்லையில் பள்ளி மாணவன் தாக்கிய சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது காவல்துறையினரும் மாவட்ட நிர்வாகமும் பிரச்சினை வரும் இடங்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் இவ்வாறு கூறினார்.