திண்டுக்கல் மாவட்டம், தாடிக்கொம்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர். சீனிவாசன் தலைமையில் புத்தாண்டு கொண்டாட்டம் தாடிக்கொம்பு வட்டாரத்திற்கு கீழ் உள்ள தாடிக்கொம்பு அரசு ஆரம்ப சுகாதார நிலையம் , சீலப்பாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தோட்டனூத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ,நரசிங்கபுரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ,மா.மு. கோவிலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் பணியாற்றும் மருத்துவர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த புத்தாண்டு தின விழா கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர்.இந்த விழாவில் மருத்துவர்கள் சிவசுப்பிரமணியன், பிரதீபா,அசோக் குமார், ஆர்த்தி, ராஜேஸ்வரன், பார்வதி பிரியா, யவனராணி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த விழாவில் சிறப்பாக பணியாற்றிய அனைத்து மருத்துவர்கள் மற்றும் பணியாளர்களுக்கும் நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன. அலுவலக கண்காணிப்பாளர் பாண்டியம்மாள், சமுதாய சுகாதார செவிலியர் சுபாஷினி மற்றும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் செல்வம் ஆகியோர் இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர்.



