கோவை, செப். 16 –
கோவை மாவட்டம் கோ.குப்புசாமி நாயுடு நினைவு மருத்துவமனை, இதயக் குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவும் வகையில் செப்டம்பர் 28-ஆம் தேதி ரன் ஃபார் விட்டில் ஹார்ட்ன் என்ற விழிப்புணர்வு மாரத்தானை நடத்துகிறது. செப்டம்பர் மாதம் குழந்தைகள் புற்றுநோய் விழிப்புணர்வு மாதமாகவும் செப்டம்பர் 29-ஆம் தேதி உலக இதய தினமாகவும் அனுசரிக்கப்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் இதயக் குறைபாடுகளை முன்கூட்டியே கண்டறிந்து உரிய நேரத்தில் சரியான சிகிச்சைகளை அளிப்பதன் மூலம் முற்றிலுமாக அவர்களை குணப்படுத்த இயலும்,இதற்கு விழிப்புணர்வு மிகவும் அவசியம். எனவே தான் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். செப் 28-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை கோவை, பாப்பநாயக்கன்பாளையம், மணி மேல்நிலைப் பள்ளியில் இந்த மாரத்தான் மூன்று வெவ்வேறு பிரிவுகளில் நடைபெறவுள்ளது.
5 மற்றும் 10 பிரிவுகளில் வெற்றி பெறுபவர்களுக்கு ரொக்க பரிசு தொகை ரூ.75,000 அறிவிக்கப்பட்டுள்ளது. மாரத்தான் கோவை மாவட்ட தடகள சங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. மாரத்தானை LMW. Lakshmi Mills Co. Ltd மற்றும் Lakshmi Card Clothing ஆகிய நிறுவனங்களும் இணைந்து நடந்துகின்றது. ஜி.கே.என்.எம் மருத்துவமனை வளாகத்தில் மாரத்தான் டி-சர்ட் அறிமுகம் மற்றும் பதக்கத்தின் வெளியீட்டு நிகழ்வு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் தபாது ரவி கே.என்.எ மருத்துவமனையின் தலைமை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசுவாமி கூறியதாவது: ரன் ஃபார் லிட்டில் ஹொர்ட்ஸ் – 2024 ன் 2-வது பதிப்பில் 2000 கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதய குறைபாடுகள் மற்றும் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட 55 குழந்தைகள் இந்த மரத்தானில் கிடைத்த நிதி மூலம் பயனடைந்தனர். கடந்த இரண்டு பதிப்புகளில் போலவே இம்முறையும் ஜி.கே.என்.எம் மருத்துவமனையில் புற்றுநோய் மற்றும் இருதய குறைபாடுகளுக்காக சிகிச்சை பெற்று குணமடைந்த குழந்தைகள் இந்த மரத்தானில் கலந்து கொள்ள உள்ளனர். KNC அறக்கட்டளையின் ஒரு பிரிவான ஜி.கே.என்.எம் மருத்துவமனை, கோவை நகரத்தில் குழந்தைகளுக்கான இருதய பராமரிப்பு மற்றும் குழந்தைகளுக்கான புற்றுநோயியல் சிகிச்சையில் முன்னோடியாக உள்ளது.
இந்த இரண்டு மருத்துவ பிரிவுகளுமே, நவீன தொழிநுட்பங்களுடனும், உலகத்தரமான மருத்துவக் கருவிகளுடனும் கட்டமைக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிகழ்வில் ஜி.கே.என்.எம் மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் ரகுபதி வேலுசுவாமி, குழந்தைகள் இருதய அறுவை சிகிச்சை நிபுணர் விஜயகுமார், குழந்தைகள் இருதய மருத்துவர் கல்யாண சுந்தரம், குழந்தைகள் ரத்தவியல் மற்றும் ஸ்டெம் செல் மாற்று சிகிச்சை மருத்துவர் அஜீதா, குழந்தைகள் இருதய மருத்துவர் சன்ச்சிதா ஹரிணி கலந்து கொண்டனர்.



