குன்றத்தூர் முருகன் கோவிலில்
தைப்பூசத் திருவிழா கோலாகலம்
குன்றத்தூர் முருகன் கோவிலில் விசேஷ நாளான தைப்பூசத் திருநாளை முன்னிட்டு தமிழகம் மட்டுமன்றி, உலகெங்கிலும் தமிழர்கள் வாழும் பகுதியில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் மற்றும் தேரோட்டங்கள் கோலாகலமாக நடைபெற்றது.
அதன் ஒரு பகுதியாக குன்றத்தூர் முருகன் கோவிலில் இந்த திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடங்கல் காவடி, அலகு குத்தி வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். கூட்டம் அதிகமாக இருந்ததால் பக்தர்கள் நீண்ட நேரம் காத்திருந்து சுவாமியை தரிசனம் செய்தனர். கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பக்தர்கள் கூட்டம் சற்று அதிகமாகவே காணப்பட்டது.
சுவாமி தரிசனம் காண வந்த பக்தர்களுக்கு, தொடர்ந்து 10 வது ஆண்டாக, பம்மல் தைப்பூசம் அன்னதானக் குழுவின் சார்பில் அறுசுவை உணவு வழங்கப்பட்டது.



