தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அரசு கலைக் கல்லூரியில் புதிதாக கட்டப்பட்ட நுழைவாயில், புதுப்பிக்க ப்பட்ட காவிரி நடைபாதை, மின் பாட தயாரிப்பு மையம் திறப்பு விழா நடைபெற்றது.
விழாவிற்கு மாவட்ட கலெக்டர் பிரியங்கா பங்கஜம் தலைமை வகித்தார்.சட்டப்பேரவை தலைவர் மு. அப்பாவு கலந்துகொண்டு கல்வெட்டு மற்றும் நுழைவாயிலை யும் திறந்து வைத்தார். உடன் உயர்கல்வி துறை அமைச்சர் கோவி .செழியன் இருந்தார் கல்லூரி வளாகத்தில் உள்ள கணித மேதை இராமானுஜர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
முன்னாள் முதல் – அமைச்சர் கருணாநிதி பெயரில் அமைய உள்ள தற்காலிக பல்கலைக்கழக இடத்தையும் பார்வையிட்டு, ஆய்வு செய்தார் பிறகு செய்தியாளர் களிடம் அவர் கூறியதாவது:
சட்டப்பேரவை தலைவராக இருந்த கடந்த 4 ஆண்டுகளில் எதிர்க்கட்சிகள் பேச அதிக நேரம் கொடுத்துள்ளேன். அதற்கு முதல்வர் மு க ஸ்டாலின் வாய்ப்பு கொடுத்துள்ளார். அதன் மூலம் சட்டப்பேரவையில் ஜனநாயகத்தை காத்துள்ளேன், தமிழகத்தில் வெளிப்படையான ஆட்சி நடக்கிறது என்றார்.
நிகழ்ச்சியில், துறை செயலர் சமயமூர்த்தி, கல்லூரி கல்வி இயக்கக ஆணையர் சுந்தரவல்லி, மாவட்ட வருவாய் அலுவலர் தியாகராஜன். சார் ஆட்சியர் ஹிருத்யா விஜயன்,எம்.பிக்கள் கல்யாணசுந்தரம், சண்முகம், முரசொலி, சுதா, முன்னாள் எம்.பி இராமலிங்கம், எம்.எல்.ஏக்கள் துரை.சந்திரசேகரன் , அன்பழகன், டி.கே.ஜி. நீலமேகம்,துணை மேயர்கள் தமிழழகன், டாக்டர் அஞ்சுகம் பூபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்



