மார்த்தாண்டம், ஆக. 20 –
இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கொல்லங்கோடு வட்டார மாநாடு கண்ணநாகம் இ.எம்.எஸ் சென்டரில் வைத்து நடைபெற்றது. வட்டார செயலாளர் ரமேஷ் கொடியேற்றினார். துணை தலைவர் ஆனந்த் பாபு தலைமை வகித்தார். அபிநவ் அஞ்சலி தீர்மானவும், கிருஷ்ணகுமார் வரவேற்புரையும் நிகழ்த்தினார்கள். அகமது, ஆகாஷ், ஜஸ்டின் ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநாட்டை வாலிபர் சங்க மாவட்ட இணை செயலாளர் ரமேஷ் துவக்கி வைத்தார். வாலிபர் சங்க முன்னாள் தலைவர் விஜயமோகனன், தையல் கலைஞர்கள் சங்க வட்டார தலைவர் சனல்குமார் ஆகியோர் வாழ்த்தி பேசினார்கள். வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் விஷ்ணு நிறைவுரையாற்றினார்.
பின்னர் புதிய வட்டாரக்குழு தேர்வு செய்யப்பட்டது. தலைவராக ஆனந்த் பாபு, செயலாளராக ரமேஷ், பொருளாளராக தோழர் கிருஷ்ண குமார், துணை தலைவராக ஆகாஷ், இணை செயலாளராக விஷ்ணு வட்டாரக்குழு உறுப்பினர்களாக அகமது, டெர்பின், ஜஸ்டின் ராஜ், ரஞ்சித், ஆகாஷ், ஆஷின் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் டெர்பின் நன்றி கூறினார்.
கூட்டத்தில் கொல்லங்கோடு ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தி முழுநேர மருத்துவமனையாக மாற்ற வேண்டும், கண்ணநாகம் சந்திப்பில் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நின்று பொதுமக்கள் மற்றும் வணிகர்களுக்கு மிகவும் சிரமம் ஏற்பட்டு வருகிறது. ஆகையால் இதற்கு நிரந்தர தீர்வு காண அரசை வலியுறுத்தியும், கண்ணநாகம் சந்திப்பில் பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் பொது கழிப்பிடம் அமைக்க கேட்டும், ஏ.வி.எம் கால்வாயை தூர் வாரி சுத்தம் செய்து பொதுமக்களுக்கு பயன்படும் வகையில் படகு சவாரி ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க கேட்டும், கொல்லங்கோடு நகராட்சி பகுதியில் ஆங்காங்கே கொட்டி கிடக்கும் குப்பைகளை அகற்ற கேட்டும், கொல்லங்கோடு நகராட்சி பகுதியில் தெருவிளக்குகள் இல்லாத பகுதியில் புதிய தெருவிளக்குகள் அமைக்க கேட்டும், கொல்லங்கோடு பகுதியில் மிக சிறப்பாக செயல்பட்டு வந்த படிப்பகங்கள் தற்போது மூடப்பட்டுள்ளது. அதனை உடனடியாக திறந்து பத்திரிக்கைகள் போட்டு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.



