சங்கரன்கோவிலில் மாவட்ட வில்லிசை நையாண்டி மேளம் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நல்வாழ்வு முன்னேற்ற சங்க துவக்க விழா நடைபெற்றது கூட்டத்தில் சங்கத்தின் தலைவர் பெரியூர் முத்துராமலிங்கம் தலைமையில் செயலாளர் காளிதாசன் பொருளாளர் காளீஸ்வரன் முன்னிலையில் கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் பெரியூர் முத்துராமலிங்கம் எழுதி இசையமைத்து பாடிய போதைக்கு எதிரான விழிப்புணர்வு குறித்த பாடல்கள் அடங்கிய ஒலிநாடாவை தென்காசி வடக்கு மாவட்ட திமுக பொருளாளர் சங்கை இல சரவணன் வெளியிட மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் சமூக ஆர்வலர் ராயல் கார்த்தி பெற்றுக் கொண்டார் நிகழ்ச்சியில் சிவகிரி தனி வட்டாட்சியர் மைதீன் பட்டாணி பட்டிமன்ற பேச்சாளர் ஆசிரியர் சங்கர் ராம் பேச்சாளர் தலைமை ஆசிரியர் நாராயணன் வழக்கறிஞர் சந்தன பாண்டியன் ஆகியோர் உரையாற்றினார்கள் வருகின்ற தை மாதம் சங்கரன்கோவிலில் புறமாண்டமான அளவில் கிராமிய கலை விழா நடத்துவது என பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன நிகழ்ச்சியில் சங்கத் துணைத் தலைவர் பழனிச்சாமி துணைச் செயலாளர் குட்டி துரை என்ற பிச்சையா இணைச் செயலாளர் முனிவேல் மூர்த்தி சட்ட ஆலோசகர் சங்கரசுப்பு குறும்பட இயக்குனர் பீட்டர் சந்திரசேகர் அசோக் வில்லிசை பாடல்கள் ராஜலட்சுமி ஜோதிகா சீனித்துரை கருப்பசாமி ஆகியோர் உள்பட தென்காசி மாவட்டத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான கிராமிய கலைஞர்கள் கலந்து கொண்டன ர்.



