தூத்துக்குடி மாவட்டம்,விளாத்திகுளம் வட்டம், நாகலாபுரத்தில் அமைந்துள்ள டி.டி.டி.ஏ ஜெயராஜ் அன்னபாக்கியம் உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஞானஜோதி ரெஜினாபாய் பணிநிறைவு பாராட்டுவிழா பள்ளி வளாகத்தில் தூத்துக்குடி -நாசரேத் திருமண்டல லே செயலர் நீகர் பிரின்ஸ் கிப்சன் தலைமையில் நடந்தது.
டி.என்.டி உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளின் மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங் முன்னிலை வகித்தார்.
பாராட்டு விழாவில் பள்ளி ஆசிரியர்கள், பள்ளி அலுவலர்கள், ஆட்சிமன்ற உறுப்பினர்கள், முன்னாள் மாணவர்கள், பெற்றோர், கவுண்டன்பட்டி ஊராட்சி மன்றத்தலைவர், நாகலாபுரம் ஊராட்சிமன்றத்தலைவர், முன்னாள் தூத்துக்குடி மாவட்ட ஊராட்சி தலைவர் தெய்வேந்திரன், புதூர் திருமண்டல பெருமன்ற உறுப்பினர் செல்வக்கனி, ஆற்றங்கரை திருமண்டல பெருமன்ற உறுப்பினர் ஞானராஜ். மற்றும் சுந்தர் மேலும் பலர் வாழ்த்தி பேசினர். தொடர்ந்து பள்ளி ஆட்சிமன்றத் தலைவர் இஸ்ரவேல் ஞானராஜ் ஜெபித்து, ஆசியுரை வழங்கினார்கள். கே.கைலாசபுரம் தாளாளர் டேவிட், தலைமை ஆசிரியர் ஐசக், போப் மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செ.எட்வர்ட் (சாரண, சாரணிய மாவட்ட பொறுப்பாளர்) இப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் தனராஜ், இப்பள்ளி முன்னாள் தாளாளர் ராஜாமணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சியை இப்பள்ளியின் முன்னாள் தலைமை ஆசிரியர் ஹெக்டர் அமிர்தராஜ் தொகுத்து வழங்கினார். ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் ஞானராஜ் சிறப்பாக செய்திருந்தார்.