தஞ்சாவூர் மே.27
தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் மேல் முறை யீட்டு மனு கொடுத்தவர்களுக்கான விசாரணை முகாம் நடந்தது. இதில் மாநில தகவல் ஆணையர் செல்வராஜ் கலந்து கொண்டார்.
தகவல் அறியும் உரிமை சட்டத்தில் தங்களுக்கு தேவையான தகவல் களை பெற பொதுமக்கள் மனுக்க ள் தாக்கல் செய்வார்கள். இதில் அவர்களுக்கு தேவையான தகவ ல்களை முழுமையாக கிடைக்காத நிலையில் மேல் முறையீடு செய்வ து வழக்கம் .இந்த மேல் முறையிட்டு மனுக்களின் மீது விசாரணை நடத் தி உரிய தீர்வு வழங்கப்படும். அந்த வகையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில தகவல் ஆணையர் செல்வராஜ் தலைமையில் மனுதாரர்களின் மேல்முறையீட்டு மனு விவாதிக் கப்பட்டது. இதில் மாவட்ட ஆட்சியரி ன் நேர்முக உதவியாளர்கள் வெங்கடேசன் (வளர்ச்சி) பிரவீனாகுமாரி (பொது), மாநில தகவல் ஆணையரின் தொடர்பு அலுவலர் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
இந்த விசாரணை முகாமில் பல்வேறு துறைகள் சார்பில் வரப்பெற்ற மொத்தம் 34 மனுக்கள் குறித்து விசாரணை நடந்தது.