ஆகஸ்ட் 29: தமிழ்நாடு ஊராட்சி செயலாளா்கள் சங்கத்தின் மாநில தலைவா் ஜான்போஸ்கோ பிரகாஷ் அறிவிப்பின்படி மாநில அமைப்பு செயலாளா் செங்கதிா் செல்வன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது தமி்ழ்நாடு அரசு ஒய்வுதிய திட்டத்தில் ஊராட்சி செயலாளா்களை இணைக்க கோாி பலமுறை கோாிக்கை விடுத்தும் பல போராட்டம் செய்தும், இதுவரை எந்த ஓய்வுதிய திட்டத்தில் இணைக்க கோாி சங்க மாநில நிா்வாகிகள் அறிவுறுத்தலின் போில் கடந்த ஆகஸ்ட் மாதம் 21 தேதியில் தமிழ்நாட்டிலுள்ள சுமாா் 8000 ஊராட்சி செயலாளா்கள் தற்செயல் விடுப்பு எடுத்து மாவட்ட தலைநகரங்களில் கவன ஈா்ப்பு ஆா்ப்பாட்டம் நடைபெற்றும் அரசு கண்டுகொள்ளாமல் இருப்பது ஊராட்சி செயலாளா்கள் மத்தியில் வேதனையாக உள்ளது.மேலும், இரண்டாம் கட்ட பேராட்டமாக வருகின்ற 27.09.2024 தேதியில் சென்னை சைதாபேட்டை, பனகல் மாளிகை முன்பு பெருந்திரள் முறையீடு போராட்டம் நடைபெற இருப்பதால் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து ஊராட்சி செயலாளா்களும் ஒற்றை கோாிக்கை வலியுறுத்தி நடைபெறும் பெருந்திரள் முறையீடு போராட்டத்திற்கு அனைத்து ஊராட்சி செயலாளா்களும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது என மாநில அமைப்பு செயலாளா் செங்கதிா் செல்வன் இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளாா்.



