கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் அருகே மேல்சம்மாண்டபட்டி கிராமத்தில் 30 ஆயிரம் லிட்டர் மேல்நிலை நீர்தேக்க தொட்டி ரூ.16.75 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வருகிறது, இப்பணி காங்கிரீட் தூண்கள் போடப்பட்டு இரண்டு நாட்கள் கூட ஆகாத நிலையில் மேல்சம்மாண்டபட்டி கிராமத்தை சேர்ந்த போதை ஆசாமி தரமான முறையில் வேலை செய்ய வில்லை என்று சேதப்படுத்தி உள்ளார். அரசு ஆனைபடி16 எம்.எம் கொண்ட கம்பிகளை பயன்பாடுத்த வேண்டும் ஆனால் தலைவரும் கவுன்சிலரும் தரமான 20 எம்.எம் கொண்ட கம்பிகளை பயன்பாடுத்தி கூடுதலாக தனது சொந்த செலவில் கட்டப்பட்டு வரும் மேல் நிலை நீர் தேக்க தொட்டியை மது அருந்தி விட்டு காண்கிரட்டை சேதப்படுத்தி கூலி வேலை செய்யும் பெண்களை தகாத வார்த்தைகளால் பேசியும் வேலை செய்பவர்களை தடுத்து வரும் நபர்கள் மீது மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்து சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஊராட்சி மன்ற தலைவர், கவுண்சிலர், அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.



