நாகர்கோவில் ஜூலை 14
நாகர்கோவில் போக்குவரத்து துறை போலீஸ் சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் மாநகரில் ஒழுகினசேரி ரயில்வே மேம்பால பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. ரயில்வே மேம்பாலம் மற்றும் சாலை இணைக்கும் பணி நடைபெற இருப்பதால் வடசேரி, ஒழுகினசேரி சந்திப்பு வழியாக திருநெல்வேலி சாலை மார்க்கமாக செல்லும் வாகனங்களும், திருநெல்வேலியில் இருந்து ஒழுகினசேரி சந்திப்பு வழியாக வடசேரி செல்லும் வாகனங்களும் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
இந்த வகையில் திருநெல்வேலியில் இருந்து ஒழிகினசேரி சந்திப்பு வழியாக வடசேரி செல்லும் அனைத்து வாகனங்களும் அப்டா மார்க்கெட், புத்தேரி எஸ் எம் ஆர் வி பள்ளி வழியாக வடசேரி செல்ல வேண்டும். தக்கலை, மார்த்தாண்டம் மற்றும் திருவனந்தபுரம் செல்லும் அனைத்து வாகனங்களும் அப்டா மார்கெட், புத்தேரி, இறைச்சகுளம் மற்றும் களியங்காடு வழியாக செல்ல வேண்டும்.
வடசேரியில் இருந்து ஒழுகினாசேரி சந்திப்பு வழியாக திருநெல்வேலி வழித்தடத்தில் செல்லும் அனைத்து வாகனங்களும் வடசேரி, எஸ் எம் ஆர் வி பள்ளி, புத்தேரி, அப்டா மார்க்கெட் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும். திருவனந்தபுரம் மார்த்தாண்டம் மற்றும் தக்கலையிலிருந்து திருநெல்வேலிக்கு செல்லும் அனைத்து வானங்களும் களியன்காடு, இறைச்சகுளம், புத்தேரி, மார்க்கெட் சந்திப்பு வழியாக செல்ல வேண்டும். மேலும் மீனாட்சிபுரத்திலிருந்து அவ்வை சண்முகம் சாலை வழியாக திருநெல்வேலி செல்லும் அனைத்து இலகு ரக வாகனங்களும் ஒழுகினசேரி சந்திப்பு, புதிய ரயில்வே மேம்பாலம் வழியாக செல்ல வேண்டும்.
இந்த போக்குவரத்து மாற்றம் இன்று 13ம் தேதி இரவு 11 மணி முதல் ரயில்வே மேம்பால சாலை இணைப்பு பணி முடியும் வரை 30 நாட்கள் அமலில் இருக்கும். மேற்படி மாற்றத்திற்கு பொதுமக்கள் அனைவரும், வாகன ஓட்டுனர்களும் ஒத்துழைப்பு தர வேண்டும் என கோட்டாறு காவல் போக்குவரத்து ஒழுங்கு பிரிவு காவல் ஆய்வாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.


