அஞ்சுகிராமம் அக்-5
குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் வியாபாரிகள் நலசங்கம் சார்பில் ஆயுத பூஜை விழாவை முன்னிட்டு கால்நாட்டு விழாவும், கடை உரிமையாளர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் வியாபாரிகள் நலசங்க தலைவர் தொழிலதிபர் எஸ்.வஸீம் தலைமை தாங்கினார், சங்க செயலாளர் ராஜலிங்கம், பொருளாளர் கனகராஜ் முன்னிலை வகித்தனர். செயற்குழு உறுப்பினர் எஸ்.பி.பாலன், சேகர், மிக்கேல் வாரியூர் நடராஜன், பொறியாளர் முத்துக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்