ஆரல்வாய்மொழி ஏப் 14
கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் தேரூரில் ரூ. 14.50 இலட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அங்கன்வாடி மைய கட்டிடத்தினை கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் என்.தளவாய்சுந்தரம் திறந்து வைத்தார்.
தேரூர் பேரூராட்சி 9-வது வார்டுக்குட்பட்ட சேதுலட்சுமி மகராணிபுரத்தில் ஏற்கனவே இயங்கி வந்த அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதடைந்து பாதுகாப்பு இல்லாத சூழ்நிலையில் இயங்கி வந்தது. இதனைக் கருத்தில் கொண்டு இப்பழைய அங்கன்வாடி மைய கட்டிடத்தை இடித்து புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் அமைத்து தர தேரூர் பேரூராட்சி பொதுமக்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
இக்கோரிக்கையினை ஏற்று அங்கன்வாடி மைய குழந்தைகளின் நலன்கருதி புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் கட்டுவதற்கு கன்னியாகுமரி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டுத் திட்டம் 2023-2024 நிதியிலிருந்து ரூ. 14.50 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனடிப்படையில் பாதுகாப்பில்லாத பழைய அங்கன்வாடி மைய கட்டிடம் இடிக்கப்பட்டு புதிய அங்கன்வாடி மைய கட்டிடம் அமைக்கும் பணிகள் நடைபெற்று பணிகள் முடிகப்பட்டது. புதிய அங்கன்வாடி மைய கட்டிட திறப்புவிழா தேரூரில் அகஸ்தீஸ்வரம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜெஸீம் தலைமையில் நடைபெற்றது.
இவ்விழாவில் 9-வது உறுப்பினர் சங்கரம்மாள் வரவேற்று பேசினார். 14-வது வார்டு உறுப்பினர் வீரபுத்திரபிள்ளை நன்றி கூறினார்.
முன்னாள் தோவாளை ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர் சாந்தினிபகவதியப்பன், அமுதாராணி, 4-வது வார்டு உறுப்பினர் கணேஷ், 11-வது வார்டு உறுப்பினர் காஞ்சனா, தலைமைக் கழகப் பேச்சாளர்கள் ஞானதாஸ், மாதவன், ஒன்றிய அவைத் தலைவர் இசக்கிமுத்து, முன்னாள் பேரூராட்சி தலைவர் வசந்திசந்திரன், கழக நிர்வாகிகள் தாமோதர தேவர், சுடலையாண்டிபிள்ளை, முருகன், சுந்தரேசன், வேலாயுத பெருமாள், தங்கப்பன், இசக்கிமுத்து, குற்றாலம், சுந்தரதாஸ், ஜெவின், மகேஷ், அலெக்சாண்டர், மணி, பாபு, வின்சென்ட், அங்கன்வாடி அமைப்பாளர் தனமுத்து, அங்கன்வாடி குழந்தைகள் மற்றும் ஊர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.