நாகர்கோவில், டிசம்பர் 18 –
வடசேரி போலீஸ் எஸ்.ஐ. குத்தாலிங்கம் மற்றும் போலீசார் வடசேரி பஸ் நிலையத்தில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு சந்தேகம் படும்படி நின்று கொண்டிருந்த ஒரு வாலிபரிடம் விசாரித்தனர். விசாரணையில் முன்னுக்கு முரணான தகவல்களை தெரிவித்ததால் சந்தேகம் அடைந்த போலீசார் அந்த வாலிபரின் உடமைகளை சோதனை செய்தனர்.
சோதனையில் 40 கிராம் கஞ்சா இருந்தது. இதனை அவர் விற்பனைக்கு வைத்திருந்தது தெரியவந்தது. இதனைத் தொடர்ந்து அந்த வாலிபரிடம் விசாரணை நடத்தியதில், அந்த வாலிபர் திருவிதாங்கோடு பகுதியைச் சேர்ந்த பெர்லின் என்ற ஜெபபெர்லின் (27) என்பது தெரியவந்தது. இதனை தொடர்ந்து பெரிலினை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்த கஞ்சாவையும் பறிமுதல் செய்தனர்.


