By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: வீட்டுக்குச் செல்லும் பாதையை அடைத்து அராஜகம்.
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > வீட்டுக்குச் செல்லும் பாதையை அடைத்து அராஜகம்.
கனஂனியாகுமரிமாவட்டம்

வீட்டுக்குச் செல்லும் பாதையை அடைத்து அராஜகம்.

Last updated: June 29, 2024 1:33 pm
June 29, 2024 50 Views
Share
SHARE

நாகர்கோவில் ஜூன் 28

 

 குற்ற வழக்கை திரும்ப பெறாததால்  வீட்டிற்கு செல்லும் பாதையை அடைத்து அராஜகத்தில் ஈடுபட்டு வரும் நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி தம்பதியினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது :-

 

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட கோணங்காடு பகுதியில் வசித்து வருபவர் லாரன்ஸ் கென்னடி. இவர் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் குளச்சல் பணிமனையில் நடத்துனராக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு மனைவி மற்றும் இரண்டு பள்ளி செல்லும் குழந்தைகள் உள்ளனர். இவர்களது வீட்டின் அருகில் உள்ள ஸ்மைலின் நிதிஷ் என்பவர்  லாரன்ஸ் கென்னடியை கடந்த சில நாட்களுக்கு முன்னர் கொடூரமாக தாக்கியதில், தோள்பட்டை எலும்பு, நெற்றி பட்டை மற்றும் மூக்கு பகுதி எலும்புகள் உடைந்து நாகர்கோவிலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்த பின்னரும் குற்றவாளியின் மிரட்டல் தொடர்ந்ததால் குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி லாரன்ஸ் கென்னடியின் மனைவி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் முறையிட்டதன் பேரில் குற்றவாளியை கைது செய்து சிறையில் அடைத்தனர். தற்போது குற்றவாளி ஸ்மைலின் நிதிஷ் காவல் நிலையத்தில் கையெழுத்து போட்டு வருகிறார். இந்த நிலையில், சிலர் சேர்ந்து லாரன்ஸ் கென்னடி, ஸ்மைல் நிதிஷ் மீது கொடுத்திருந்த வழக்கை பின்வலிக்க வேண்டும், இல்லையென்றால் உங்கள் வீட்டிற்கு செல்லும் வழிப் பாதையை அடைப்போம் என்றும் மிரட்டலும் விடுத்து வந்தனர். இந்த நிலையில் 40 ஆண்டுகளுக்கு மேலாக பயன்படுத்தப்பட்டுவரும் வழிப்பாதை அடைக்கப்பட்டால், வீட்டைவிட்டு வெளியே செல்வதற்கோ, உள்ளே வருவதற்கோ இயலாத சூழ்நிலை ஏற்படும். பிள்ளைகளுக்கு பாடசாலை செல்வதற்கும் இயலாத சூழ்நிலை ஏற்படும் என்பதை உணர்ந்து இரணியல் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்து வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர், தேவசகாயம் மேற்படி வழி பாதையை சேதப்படுத்தி மிரட்டியது சம்பந்தமாக குளச்சல் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் குளச்சல் காவல் நிலையத்தினர் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமல் இருந்து வருகின்றனர். இந்நிலையில் லாரன்ஸ் கென்னடி பணிக்கு சென்ற நேரத்தை பயன்படுத்தி, லாரன்ஸ் கென்னடியின் வீட்டிற்கு செல்லும் வழிப் பாதையை கேட் போட்டு அடைத்துள்ளார். இது குறித்து காவல்துறைக்கு தகவல் கொடுத்தும் எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. வழி பாதையில் போடப்பட்டுக்கொண்டிருக்கும் கேட் பூட்டு போட்டு அடைக்கப்பட்டால், வீட்டில் உள்ள எவரும் வெளியே வரவும், வெளியில் இருப்பவர்கள் உள்ளே செல்வதற்கோ இயலாத அவல நிலை ஏற்படும். எனவே காவல்துறையினர், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆகியோர் உடனடியாக  நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில்  கூறப்பட்டுள்ளது.

You Might Also Like

பூதப்பாண்டியில் உங்களுடன் ஸ்டாலின்

ரூ 4.23 கோடி ஊழல் முறைகேடு; தர்மபுரம் முன்னாள் ஊராட்சி தலைவி மீது நடவடிக்கை எடுத்திட இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாலை மறியல் போராட்டம்

குழித்துறையில் மீனவர் தூக்கு போட்டு தற்கொலை

தேரூரில் 16.50 இலட்சம் ரூபாய் செலவில் புதிய காங்கிரீட் தளம் அமைக்கும் பணி

பொய் புகார் அளிக்க சதி திட்டம் தீட்டிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி திமுக பகுதி கழக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் மனு

Share
Leave a comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!

Popular News
தேனிமாவட்டம்

காமராஜரின் 122 – வது பிறந்தநாள்-ஆண்டிபட்டி

July 17, 2024 41 Views
அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாவட்ட ஆட்சித் தலைவர் மனு
மதுரையில் ஆயுஷ் 2024 பாரம்பரிய மருத்துவ கண்காட்சி
பராமரிப்பு செய்யப்படும் பாலங்கள்
பத்தாம் வகுப்பு பொது தேர்வில் தமிழகத்தில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • InterestsNew
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account

Register Lost your password?