தமிழ்த் திரையுலகில் பெரிய நட்சத்திரங்கள், நிறுவனங்களின் படங்கள் நடுவே சிறிய பட்ஜெட் படங்களுக்கு திரையரங்குகள் கிடைக்காமல் சிறிய தயாரிப்பாளர்கள் நஷ்டமடைகிறார்கள். இந்த இடர்பாடுகளை போக்க , இப்பிரச்சினைக்கு தீர்வுகாண திரையுலக அமைப்புகளின் இசைவுடன்
சிறு பட்ஜெட் திரைப்படங்களை வெளியிட பல சர்வதேச நாடுகளை ஒன்றிணைத்த சர்வதேச நிறுவனம் ஒன்றை துவக்கி வைக்கும் நிகழ்ச்சிக்கான செய்தியாளார் சந்திப்பு சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தில் நடை பெற்றது .
இதில் இலங்கை தமிழரான திரைப்பட இயக்குநர் எ.ஆர்.எம் றஹீம்
, ஆர்.ஆர்.சேலம் பிரியாணி நிறுவனர்
ஆர்.ஆர்.தமிழ்ச்செல்வன்,(சேலம் ஆர்.ஆர். பிரியாணி அதிபர்)
ரஜினிகாந்த்,
யாரப்பு யாத்திரன்,
கார்த்தீஸ்வரி,
இயக்குநரின் புதல்வர் முஹம்மட் ஹிஸ்புல்
மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
இயக்குநர் எஆர்.எம்.றஹீம் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:-
ஆர்.ஆர் தமிழ் இண்டர்நேஷ்னல் ஃபிலிம் ஃபேக்டரி என்ற பெயரில் துவக்கப்பட்ட இந்த அமைப்பின் மூலம் வணிக ரீதியாக வெளியிட முடியாத, அரங்குகள் கிடைக்காத நல்ல கருத்துள்ள படங்களை வெளிநாடு வாழ் தமிழர்கள் அதிகம் உள்ள நாடுகளில் வெளியிட்டு சிறு தயாரிப்பாளர்களின் இழப்பீடுகளை கலையும் வகையில் செயல்படும். இதன் மூலமாக வெளியீட்டுக்காக காத்திருக்கும் சிறிய படங்கள் மக்களை சென்றடையும் என்று அவர் கூறினார்.
இறுதியாக ஆர்.ஆர் இண்டர் நேஷ்னல் ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனத்தின் இலச்சினை வெளியிடப்பட்டது.
இந்த அமைப்பின் புதிய தலைவராக ஆர்.ஆர். சேலம் பிரியாணி நிறுவனர் தமிழ்ச்செல்வன் தலைவராக நியமனம் செய்யப்பட்டிருக்கிறார் . செயலாளாராக இயக்குநர் எ.ஆர்.எம் றஹீம் என்பது குறிப்பிடத்தக்கது.