தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி வட்டம், இலளிகம் கிராமம், தியாகி ஆர். பச்சாகவுண்டர் நினைவு படிப்பகம் சார்பில் இலக்கிய பேராசான் அமரர் ப. ஜீவானந்தம் 62 – வது நினைவு தினம் நிகழ்சி நடைபெற்றது. தியாகி ஆர். பி. நினைவு படிப்பக நிர்வாகியும், இலளிகம் கிராம ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜெ. பிரதாபன் அவர்கள் அமரர் ப. ஜீவானந்தம் படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி பேசினார். இதில் படிப்பக நிர்வாகக்குழு, உறுப்பினர்கள், எல். சி. கிருஷ்ணன், அலமேலு , எத்துராஜ் மற்றும் காளியம்மாள், ராணி,கோவிந்தம்மாள், தீபாஞ்சி,சிங்காரவேலன், குஷ்பு ஆகியோர்
கலந்துக் கொண்டு அமரர் ப. ஜீவானந்தம் உருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.



