தருமபுரியில் அனைத்து கட்சியின் சார்பில் சட்ட மேதை அம்பேத்கரை பாராளுமன்றத்தில் தரை குறைவாக பேசிய அமித்ஷா வை கண்டித்து தருமபுரி பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திராவிட முன்னேற்ற நகர கழக சார்பில் நகரச் செயலாளர் நாட்டான் மாது தலைமையில் நடைபெற்றது. இதில் நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான்மாது, துணைச் செயலாளர் முல்லைவேந்தன், மாவட்ட பொருளாளர் தங்கமணி, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அசோகன், தருமபுரி மேற்கு ஒன்றிய செயலாளர் டி .எல். காவேரி, சுருளிராஜன், டி. ஏ. ரவி, மாதேஸ்வரன், அன்பழகன், இளைய சங்கர், ரகு மற்றும் மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை கழக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர். தருமபுரி மாவட்ட மக்கள் தேசிய கட்சி சார்பில் மாவட்டச் செயலாளர் செல்வ கமல், மாநிலக் கொள்கை பரப்புத் துணைச் செயலாளர் கார்த்திக், மொரப்பூர் ஒன்றிய செயலாளர் மூக்கன் ஆகியோர் தலைமையில் ஜி.எச்.யில் உள்ள அம்பேத்கர் சிலை அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .இதில் இளைஞர் அணி செயலாளர் மணிகண்டன், சக்திவேல், சபரி, ஆசை மற்றும் உறுப்பினர் கலந்து கொண்டனர். தருமபுரி மாவட்ட மார்க் கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மாவட்ட செயலாளர் சிசுபாலன் தலைமையில் மாநில குழு உறுப்பினர் ஏ .குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் மாரிமுத்து, நாகராஜன், முத்து, விஸ்வநாதன், மல்லிகா, தனுசன், சக்திவேல்,தருண், தருமபுரி நகரம் ஜோதிபாசு, தருமபுரி ஒன்றியம் கோவிந்தசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த ஆர்பாட்டத்தில் கலந்து கொண்ட அனைத்து கட்சியினரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா வை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பினர்.


