களியக்காவிளை, நவ. 24 –
மத்திய ஜவுளி அமைச்சகத்தின் நிதி உதவியுடன் தொழில் முனைவோருக்கான மேம்பாட்டு பயிற்சி முகாம் குழித்துறையில இன்று (நவம்பர் 24) துவங்கி 29-ம் தேதி நிறைவடைகிறது. இந்த பயிற்சி முகாம் தொடர்ந்த ஐந்து நாட்கள் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது.
பயிற்சி சிறப்பு விருத்தினர்களாக கேடர் இந்தியா இயக்குனர் மோகன்குமார், மத்திய ஜவுளி அமைச்சகத்தின் சார்பாக நாகர்கோவில் அலுவலகத்தில் இருந்து துணை இயக்குனர் வீணா, ரேவதி, சுனில்குமார், ஸ்டேட் பாங்கு ஆப்-இந்தியா குழித்துறை கிளை சீப் மேனேஜர் லின் இராமச்சந்திரன், எம்.எஸ்.எம்.ஈ ராம் பிரசாத், முருகேசன் டில்சின் நவீன் உள்ளிட்டோர் வருகை தர உள்ளனர்.
தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி முகவுமில் பொருளாதார மேம்பாடு, வரவு செலவு கணக்குகள், எம்.எஸ்.எம். ஈ.-யின் செயல்பாடுகள், ஏற்றுமதி செய்தல், புதிய பொருட்கள் வடிவமைத்தல், டிஜிட்டல் மார்க்கெட்டிங், சிறந்த தொழில் முனைவோர் அனுபவம் பகிரிதல், உள்ளிட்ட பயிற்சிகள், நடக்கிறது. பயிற்சியின் முடிவில் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.


