ஈரோடு மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்றம் சார்பில் ஈரோடு கிருஷ்ணா தியேட்டர் அருகே நீர் மோர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. முன்னாள் எம் எல் ஏ வும் ஈரோடு மாநகர மாவட்ட எம் ஜி ஆர் மன்ற செயலாளருமான தென்னரசு தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் அதிமுக மாவட்ட செயலாளர் கே வி ராமலிங்கம் கலந்து கொண்டு பொதுமக்களுக்கு நீர் மோர் வழங்கினார். மற்றும் தர்பூசணி பழம் குளிர் பானம் போன்றவையும் வழங்கப்பட்டது .
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பேரவை செயலாளர் ஈகிள் சதீஷ் பெரியார் நகர் பகுதி அவை தலைவர் மீன் ராஜா தனியார் மின் அமைப்பு மாநில தலைவர் மின் மணி எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர் நாகராஜ் அக்ரகாரம் பகுதி செயலாளர் முனுசாமி மற்றும் நிர்வாகிகள் அருள், கோட்டை லோகநாதன், வெங்கடாசலம் ,ஜீவா ரவி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
எம்ஜிஆர் மன்றம் சார்பில் நீர்மோர் வழங்கும் நிகழ்ச்சி அதிமுக மாவட்ட செயலாளர் கே வி ராமலிங்கம் தொடங்கி வைத்தார்



