மதுரை, அக். 06 –
மதுரை மாவட்டம் அம்மா உணவக பணியாளர்கள் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றிய மதுரை மாவட்ட தலைவர் அ.இளங்கோ தலைமையில் 43 பணியாளர்கள் இணைந்துள்ளனர். இக்கூட்டத்தில் அரசு அலுவலர் ஒன்றிய மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ந. சண்முகசுந்தரம், சசிகுமார், ஆதி.குமார், சரவணகுமார், செந்தில்குமார் ஆகியோர் முன்னிலையில் நிர்வாகிகள் அறிமுகம் நடைபெற்றது.
அந்த வகையில் அம்மா உணவக பணியாளர்கள் சங்க அமைப்பு கீழ்காணும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். மாவட்டத் தலைவர் முருகேஸ்வரி, துணைத் தலைவர் கலைவாணி, மாவட்ட செயலாளர் பரமேஸ்வரி, துணை செயலாளர் பாலா ஜோதி, பொருளாளர் முருகேஸ்வரி, இணைச் செயலாளர் சூர்யா, அமைப்பு செயலாளர் ஈஸ்வரி மற்றும் நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.



