தருமபுரியில் அனைத்து இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழ்நாட்டில் முதல் முறையாக தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் ஆகிய மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம் தருமபுரி மருந்து வணிகர்கள் சங்க கூட்ட அரங்கில் எம்.மாரியப்பன் மாநில தலைவர் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு எஸ்.ராஜ்குமார் மாநில அமைப்பு செயலாளர் வரவேற்புரையாற்றினார். மாநில செயற்குழு உறுப்பினர் சந்துரு, மாநில செயற்குழு உறுப்பினர் ஈ.பிலிப் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த கூட்டத்தில் மாவட்ட நிர்வாகிகளுக்கு உறுப்பினர்கள் சேர்க்கை குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அகில இந்திய திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் உறுப்பினர்களை இரண்டு லட்சம் பேர் ஒரு மாதத்திற்குள் சேர்ப்போம், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் தலைமை யாரிடம் சேர்கிறதோ அவர்களிடம் இணைந்து வெற்றி பெறுவோம். டி எம் சி இணைந்து பணியாற்றி கிராமப்புறங்களில் கொடியேற்றுதல், சாலை வசதி, குடிநீர் ஆகிய பிரச்சனைகளுக்கு தீர்வு செய்வோம். மக்களுக்கு துணிந்து சேவையாற்றுவோம் ஆகிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. பின்னர் காஷ்மீரில் சுற்றுலா பயணிகளை தாக்கியதற்கு கண்டனம் தெரிவித்து, தாக்குதலில் இறந்தவர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினார்கள். இறுதியாக பி.வீரமணி மாநில பொதுச் செயலாளர், வல்லபாய் பட்டேல் மாநில பொதுச் செயலாளர் ஆகியோர் நன்றி கூறினார்கள். இந்த கூட்டத்தில் மாநில, மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். இதை அடுத்து கட்சி சார்பில் ஆதரவற்ற பள்ளி குழந்தைகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது.
அஇ திரிணாமுல் காங்கிரஸ் தமிழ்நாட்டில் முதல் முறையாக மாவட்ட நிர்வாகிகள் கலந்தாய்வுக் கூட்டம்



