தருமபுரி மாவட்டம், பாலக்கோடு பேரூராட்சிக்கு உட்பட்ட சாவடி தெரு, சானா தெரு, மல்லி குட்டான் தெரு ஆகிய தெருகளில் பைப் லைன் தருவதாக கூறி பள்ளம் தோண்டப்பட்டு இரண்டு வருடங்களுக்கு மேல் ஆகிறது. இதுவரை இதற்கான எந்த வேலையும் பேரூராட்சி சார்பில் செய்யவில்லை இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். டெங்கு மற்றும் பல நோய்களுக்கு பொதுமக்கள் தினந்தோறும் மருத்துவமனைக்கு சென்று வருகின்றனர். உடனடியாக அதிகாரிகள் தலையிட்டு இந்த வேலை செய்து தர வேண்டும் என்று பாலக்கோடு வட்ட பாரதிய ஜனதா கட்சியின் மாவட்டத் துணைத் தலைவர் பி. கே. சிவா சமூக ஆர்வலர் பொதுமக்கள் சார்பாக வேண்டுகோள் விடுத்தார். பேரூராட்சி சார்பில் இந்த வேலை செய்யவில்லை என்றால் எனது தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்தார்.



