தருமபுரியில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் சமூக நீதி போராளி ஐயா. இ.ரா.அதியமான் நிறுவனத் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலின்படி பி.முருகன் மேற்கு மாவட்ட செயலாளர் தலைமையில், எஸ். ராஜ்குமார் கிழக்கு மாவட்ட செயலாளர் முன்னிலையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கண்டன உரை அர. விடுதலை செல்வன் மாநிலத் துணைப் பொதுச் செயலாளர், உமா மகேஸ்வரி மாநில மகளிர் அணி துணைச் செயலாளர்,நன்றி உரை சரவணகுமார் மேற்கு மாவட்ட அமைப்பு செயலாளர். இந்த ஆர்ப்பாட்டத்தில் நீட் தேர்வு முறையை ரத்து செய்ய வலியுறுத்தியும், இந்தியா முழுவதும் ஜாதி வாரி கணக்கெடுப்பு உடனடியாக நடத்த வேண்டும் என ஒன்றிய பாஜக அரசை வலியுறுத்தியும், கோவிலாங்குலம் அழகேந்திரன் ஆவண படுகொலை கண்டித்தும் ஆதித்தமிழர் பேரவையான தருமபுரிகிழக்கு மாவட்ட செயலாளர் எஸ். ராஜ்குமார் அவர் மீது போடப்பட்ட பொய் வழக்கு மற்றும் அவர் குடும்பத்தார் மீதும் போடப்பட்ட பொய் வழக்கை திரும்ப பெற வலியுறுத்தியும்,தாக்கப்பட்டவர் மீது வான்கொடுமை தடுப்பு சட்டத்தில் வழக்கு பதிவு செய்து அவர்கள் கைது செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டது



