நாகர்கோவில் ஆக 18
கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின்படி, குடிபோதையில் வாகனம் ஓட்டும் நபர்கள் மீது தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் யாங்சென் டோமா பூட்டியா மேற்பார்வையில் கோட்டார் போக்குவரத்து காவல் நிலைய ஆய்வாளர் திரு.வில்லியம் பெஞ்சமின் தலைமையில், சார்பு ஆய்வாளர் ஆல்ட்ரின் சுமித் மற்றும் காவலர்கள் நாகர்கோவில் மாநகர் வடசேரி அருகே
வாகன தணிக்கையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மினி பேருந்தின் ஓட்டுநர் செல்போன் பேசிக்கொண்டு வருவதைக் கண்டு தடுத்து நிறுத்தி ஓட்டுநரை பரிசோதித்ததில் ஓட்டுநர் மது போதையில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
குடிபோதையில் மினி பேருந்து ஓட்டி வந்த அப்பட்டுவிளையைச் சேர்ந்த அனிஷ் மீது குடிபோதையில் அபாயகரமாக செல்போன் பேசிக்கொண்டு வாகனம் ஓட்டுதல் போன்ற போக்குவரத்து விதிமீறல் வழக்கு பதிவு செய்து பேருந்தை பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.