கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை காவல் நிலையத்திற்கு தினமும் ஏராளமான பொதுமக்கள் வழக்குகள் சம்மந்தமாக வருகை தருகின்றனர். இவ்வாறு வரும் பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக காவல் நிலைய வளாகத்தில் நேற்று இரவு நேரத்தில் ஏராளமான நாய்கள் அச்சுறுத்துவதும் அங்கேயே படுத்து உறங்குவதுமாக உள்ளன. எனவே பத்மனாபபுரம் நகராட்சி நிர்வாகம் உடனடியாக நாய்களை அப்புறபடுத்த பொதுமக்கள் கோரிக்கை.



