மயிலாடு துறை மாவட்டம் குத்தாலாம் தாலுக்கா வழுவூர் பூவாலை ரோட்டில் வசிப்பவர் லெட்சுமணன் இவரது மனைவி மஞ்சுளா (45), இவர்களுக்கு இரண்டு பென் குழந்தைகள் உள்ளது. குழந்தைகளை கல்லூரியில் சேர்க்க -4 / 11 /23 அன்று வழுவூர் கொத்தன் தெருவை சேர்ந்த ரேனுகா என்பவரிடமும் சங்கீதா என்பவரிடமும் தலா ரு 50 ஆயிரம் கடன் பெற்றுள்ளார். கடந்த ஒரு வருடத்தில் மட்டும் இருவருக்கும் சேர்த்து ரு.2- லட்சம் வட்டி கட்டி உள்ளார். ஆனால் கத்து வட்டி போட்டு, ஆளுக்கு ரு.3 லட்சம் என ரு-6. லட்சம் வட்டி வேண்டும் என நேற்று (2/5/25) இரவு மஞ்சுளா வீட்டிற்கு இருவரும் சென்று தகாத வார்த்தைகளால் திட்டி அவரை அடித்து உள்ளனர் இதனால் மன உளைச்சல் அடைந்த மஞ்சுளா இன்று விஷம் அருந்தி ஆபத்தான நிலையில் மயிலாடுதுறை அரசு பெரியார் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகிறார் இதனால் அந்த பகுதியில் மிகுந்த பரப் பரப்பு ஏற்பட்டுள்ளது.



