By using this site, you agree to the Privacy Policy and Terms of Use.
Accept
தின தமிழ்தின தமிழ்தின தமிழ்
Font ResizerAa
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Reading: தோவாளை சானலில் கருகிய பயிர்களுக்கு உரிய இழப்பீடு
Share
Font ResizerAa
தின தமிழ்தின தமிழ்
Search
  • இநஂதியா
  • தமிழ்நாடு
  • மாவட்டம்
    • கனஂனியாகுமரி
    • சென்னை
    • வேலூர்
    • திருப்பத்தூர்
    • கிருஷ்ணகிரி
    • தருமபுரி
    • சேலம்
    • ஈரோடு
    • நாமக்கல்
    • கரூர்
    • கோயம்புத்தூர்
    • திருப்பூர்
    • மயிலாடுதுறை
    • அரியலூர்
    • தஞ்சாவூர்
    • திண்டுக்கல்
    • மதுரை
    • தேனி
    • இராமநாதபுரம்
    • திருவில்லிபுத்தூர்
    • தென்காசி
    • தூத்துக்குடி
    • திருநெல்வேலி
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கூடலூர்
    • கோவில்பட்டி
    • சிவகங்கை
    • செங்கல்பட்டு
    • திருச்சி
    • திருவண்ணாமலை
    • திருவள்ளூர்
    • திருவாரூர்
    • நாகப்பட்டினம்
    • நீலகிரி
    • புதுக்கோட்டை
    • பெரம்பலூர்
    • விருதுநகர்
    • விழுப்புரம்
    • புதுச்சேரி
  • மருத்துவம்
  • அரசியல்
  • உலகம்
    • இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல்
    • உக்ரைன்-ரஷ்யா போர்
  • கல்வி
  • விளையாட்டு
    • சதுரங்கம்
  • சினிமா
  • ஆன்மிகம்
Have an existing account? Sign In
Follow US
E-Paper
தின தமிழ் > மாவட்டம் > கனஂனியாகுமரி > தோவாளை சானலில் கருகிய பயிர்களுக்கு உரிய இழப்பீடு
கனஂனியாகுமரிமாவட்டம்

தோவாளை சானலில் கருகிய பயிர்களுக்கு உரிய இழப்பீடு

Last updated: August 14, 2024 11:30 am
August 14, 2024
113 Views
Share
SHARE

 நாகர்கோவில் ஆக 11 

 

பாஜக சிறுபான்மைப் பிரிவு மாநில பொதுச் செயலாளர் சதீஸ் ராஜா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “கன்னியாகுமரி மாவட்டத்தின் ஜீவாதாரமாக இருப்பது பேச்சிப்பாறை அணையாகும். குமரிமாவட்டத்தின் பாசனத் தேவையை பூர்த்தி செய்வது இந்த அணைதான். ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 1 ஆம் தேதி, பேச்சிப்பாறை அணைத் தண்ணீரானது விவசாயிகளின் பாசனத் தேவைக்காகத் திறக்கப்படும்.

 

அந்தவகையில் வழக்கம்போல் கடந்த ஜூன் 1 ஆம் தேதியும் பேச்சிப்பாறை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. ஆனால் தோவாளை சானலுக்கு மட்டும் தண்ணீர் விடவில்லை. காரணம், தோவாளை சானலுக்கு உட்பட்ட தூவச்சி பகுதியில் உடைப்பு ஏற்பட்டு, அதை சீரமைக்கும் பணிகள் நடந்து வந்தது. இந்தப் பணிகள் ஆமை வேகத்தில் நடந்து வந்ததால் தோவாளை சானலுக்கு தண்ணீர் வழங்க முடியவில்லை. இருந்தும், தோவாளை சானலில் வழக்கம்போல் தண்ணீர் வரும் என நம்பி விவசாயிகள் நாற்றங்கால் பாவியிருந்தனர். தண்ணீர் வராததால் பயிர்களும் கருகிப் போனது. 

 

தண்ணீர் வரத் தாமதமாகும் என விவசாயிகளுக்கு முறைப்படி தெரிவிக்கவும் இல்லை. இதனால் விவசாயிகளுக்கு பெரும் பொருளாதார இழப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் சட்டசபையில் நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் இருபது நாள்களில் தூவச்சி பகுதியில் சானல் சீரமைப்பு பணிகள் முடிந்து தண்ணீர் திறந்துவிடப்படும் என்று அறிவித்தார். ஆனால் அதன்பின்னரும் திமுக அரசின் மெத்தனத்தால் பணிகள் மெதுவாக நடந்ததால் தோவாளை சானலில்  தண்ணீர் வரவில்லை. 

 

தூவச்சிப் பகுதியில் உடைப்பு சரிசெய்யப்பட்டு கடந்த 7 ஆம் தேதிதான் தோவாளை சானலில் தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதுவே ஒருமாதத்திற்கும் மேல் தாமதம் ஆகும். இந்நிலையில் இப்போது தண்ணீர் திறந்துவிட்டாலும், தோவாளை சானலின் கடைமடை பகுதிவரை தண்ணீர் சென்று சேரவில்லை. இதனால் பயிர்கள் கருகிப் போய் உள்ளது. இனி தண்ணீர் சென்றாலும் கூட நெற்பயிர்களைக் காப்பாற்ற முடியாது என்பதே இப்போதைய நிலமை. இதேபோல் தோவாளை சானலை நம்பி விவசாயம் நடந்துவந்த  6000 ஏக்கர் பரப்பில் நெற்பயிர் சாகுபடி பாதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து  வேளாண்மைத்துறை அதிகாரிகள் வழியாக, ஆட்சியர் ஆய்வுசெய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும். அதேபோல் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது

விளம்பரம்

You Might Also Like

ஊத்தங்கரை அருகே பல வருடங்களாக மின் இணைப்பு வழங்காமல் அலைக்கழிப்பு: விவசாயி சக்திவேல் பேட்டி
இலந்தையடிவிளை அரசு பள்ளியில் ஐந்து முதல் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு நோட்டு புத்தகம்
பார்த்பென்ஸ், டெய்ம்லர் நிறுவனங்கள் இணைந்து புதிய சுமை கையாளும் வாகனங்கள் அறிமுகம்
மாணவ மாணவியர்களுக்கு காமராஜர் விருது: மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
உலகத் தமிழ்ச் சங்கம் மற்றும் கோ.புதூர் அல்-அமீன்
Share

Weekly Newsletter

Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
கனஂனியாகுமரிமாவட்டம்

திமுக அரசைக் கண்டித்து24-ம் தேதி அதிமுக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

June 26, 2024
100 Views
கோனேரி கிராமத்தில் காட்டு மாடுகளை கட்டுப்படுத்தும் முறை ! வேளாண் கல்லூரி மாணவி செய்முறை விளக்கம் !!
கிணத்துக்கடவு வட்டம், ஜக்கார் பாளையம் கிராமத்தில் பொது மக்களுக்கு மருத்துவ முகாம்!!!
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமதியின்றி பனை மரங்கள் வெட்டப்படுவது அதிகரிப்பு
புதிய தார் சாலை அமைக்கும் பணி
- Advertisement -
Ad imageAd image
Global Coronavirus Cases

Confirmed

0

Death

0

More Information:Covid-19 Statistics
தின தமிழ்
தினதமிழ் இணையதளத்தில் இடம் பெறும் செய்திகள் அனைத்தும் பலமுறை உண்மை தன்மையை ஆராய்ந்து, அனுபவமிக்க செய்தியாளர்களை கொண்டு பதிவு செய்யப்படுகிறது.
முக்கிய இணைப்புகள்
  • My Bookmark
  • Interests
  • About us
  • Terms And Conditions
  • Privacy Policy
தொடர்புகொள்ள
  • Contact
  • Complaint
  • Advertise

எங்களை குழுசேர்க்க

எங்களின் புதிய செய்திகளை உடனுக்குடன் பெற எங்கள் செய்திமடலுடன் இணைந்துகொள்ளவும்!

© 2025. All rights reserved by தின தமிழ்.
  • முகப்பு
  • தொடர்புகொள்ள
  • இணைய
  • உள்நுழைய
Welcome Back!

Sign in to your account