ஈரோடு மே 31
ஈரோடு சூரம்பட்டி வலசு ஆசிரியர் காலனியை சேர்ந்தவர் சுப்ரமணியம் (வயது 46 ) பத்திர எழுத்தரான இவர் கால்பந்து வீரர் பல போட்டிகளில் கலந்து கொண்டு விளையாடி உள்ளார்
நேற்று காலை ஈரோடு சங்கு நகர் பகுதியில் உள்ள மைதானத்தில் தனது நண்பர்களுடன் கால்பந்து விளையாடிக் கொண்டிருந்தார் அப்போது அவர் திடீர் என்று மயங்கி விழுந்தார் உடனே அவரை ஈரோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர் பிறகு மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லப்பட்டார் ஆனால் வழியிலேயே சுப்பிரமணியம் பரிதாபமாக இறந்தார் இது குறித்து ஈரோடு சூரம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.