தக்கலை, பிப்- 2
மார்த்தாண்டத்தில் இருந்து தக்கலை நோக்கி நேற்று முன்தினம் நள்ளிரவு டாரஸ் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. தக்கலை அருகே கல்லு விளை என்ற பகுதியில் சென்றபோது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி சாலையின் நடுவே உள்ள செண்டர் மீடியனில் மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக டிரைவர் காயங்கள் எதுவும் இன்றி உயிர்தப்பினார். நள்ளிரவு நேரம் என்பதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இது குறித்து அப் பகுதியை சேர்ந்தவர்கள் உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் வந்து விசாரணை நடத்தினர்.
மேலும் மதுபோதையில் லாரியை ஓட்டுவதால் விபத்து காரணமாக அமைந்து விடுகிறது எனவும், சரக்குகளை ஏற்றி செல்லும் போதும், இறக்கி விட்டு வரும்போதும் பெரும்பாலான டிரைவர்கள் மது போதையில் தான் லாரியை ஓட்டுகின்றனர். எனவே விபத்துகளை தடுக்க டிரைவர்கள் மது அருந்தினார்களா? என போலீசார் விசாரணை
மேற்கொண்டு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.