கோவை பிப்:18
1998 ஆம் ஆண்டு பிப்ரவரி 14 ஆம் தேதி கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் தொடர் குண்டு வெடித்து 58 கும் மேற்பட்ட மக்கள் உயிர் நீத்தனர்.
மேலும் 200க்கும் மேற்பட்ட பொது மக்கள் படுகாயமடைந்த
சம்பவம் கோவையை மட்டுமல்லாமல் நாட்டையே உலுக்கியது.
இதில் உயிர்த்தியாகம் செய்த பொதுமக்களுக்கு ஆண்டுதோறும் பிப்ரவரி 14 ஆம் தேதி பல இந்து அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் நினைவஞ்சலி மற்றும் மலரஞ்சலி செலுத்தி வருகின்றது.
இதில் அகில பாரத மக்கள் கட்சி சார்பில் நிறுவன தலைவர் முனைவர் S.ராமநாதன் ஜி தலைமையில் நினைவு தீபம் ஏற்றி ஊர்வலமாக சென்று நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்வு நடைபெற்றது.
இதுகுறித்து அகில பாரத மக்கள் கட்சி நிறுவன தலைவர் முனைவர் S.ராமநாதன் ஜி பேசுகையில் குண்டு வெடிப்பில் உயிரிழந்தவர்களுக்கு நினைவுத்தூண் அமைக்கவேண்டுமென்று பல ஆண்டுகளாக தமிழக அரசிற்கு கோரிக்கை வைத்து வருகிறோம்.
ஆனால் தற்போது வரையிலும் எந்த ஒரு அரசும் செவி சாய்க்க வில்லை இதனை நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம் என்று பேசினார்.
இந்நிகழ்வில் மாவட்ட தலைவர் சேகர்,மாவட்ட துணை தலைவர் நாராயணசாமி, மாவட்ட செயலாளர்கள் கோபால், குமார்,மாவட்ட பொதுச் செயலாளர் ரமேஷ் மகளிர் அணி மாவட்ட துணைத் தலைவி கோமதி,மாவட்ட இளைஞரணி தலைவர் சதீஷ், மாவட்ட செய்தி தொடர்பாளர் நாகராஜ், வழக்கறிஞர் பிரிவு மாவட்ட தலைவர் அஜய்,சதீஷ் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டு மலர்தூவி நினைவஞ்சலி செலுத்தினர்.



