கிருஷ்ணகிரி, செப்டம்பர் 3 –
கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியம், அவதானப்பட்டி ஏரி படகு இல்லத்தில் தென்மேற்கு பருவமழையொட்டி தீயணைப்புத்துறை வீரர்கள் சார்பில் படகு, பாதுகாப்பு கவச உடை, கயிறு, மரம் அறுக்கும் இயந்திரங்கள், கான்கிரீட் உடைப்பு கருவிகள் உள்ளிட்ட தளவாட பொருட்கள் மூலம் பேரிடர் மீட்பு காலத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்வது குறித்து நடைபெற்ற மாதிரி ஒத்திகை நிகழ்ச்சியை மாவட்ட ஆட்சித்தலைவர் ச. தினேஷ் குமார் நேரில் பார்வையிட்டார். உடன் மாவட்ட தீயணைப்பு அலுவலர் வேலு, வட்டாட்சியர் சின்னசாமி ஆகியோர் உள்ளனர்.



