திருவெண்ணெய்நல்லூர், செப். 01 –
திருவெண்ணெய்நல்லூரில் நகர திமுக சார்பில் பொது உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் நகர திமுக சார்பில் முன்னாள் அமைச்சர் பொன்முடி எம்.எல்.ஏ ஆணைக்கிணங்க விழுப்புரம் தெற்கு மாவட்ட செயலாளர் பொன் கௌதம சிகாமணி அறிவுறுத்தலின் பேரில் நகர செயலாளர் பூக்கடை கணேசன் தலைமையில் 6, 7, 11 மற்றும் 12-வது வார்டுக்கான பொது உறுப்பினர் சேர்க்கை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் திமுக அரசின் நான்காண்டு சாதனை திட்டங்கள் குறித்தும் வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் அதிகப்படியான வாக்குகளை பெற்றுத் தருதல் மற்றும் சட்டமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
இதில் பேரூராட்சி மன்ற தலைவர் அஞ்சுகம் கணேசன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஜோதி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர் சுரேஷ்பாபு, மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் கிருஷ்ணராஜ், முன்னாள் நகர செயலாளர் செல்வம், நகர நிர்வாகிகள் டி.கே.எஸ். செந்தில் முருகன் சையத் நாசர், காந்திமதி வெங்கடேசன், தில்லை காமராஜ், அறங்காவலர் குழு தலைவர் ராஜாராம், வார்டு செயலாளர்கள் அருள், சிறுவா மணி, நகர இளைஞர் அணி அமைப்பாளர் சுரேஷ், ஆதிதிராவிடர் அணி அமைப்பாளர் பாக்யராஜ், நகர இளைஞரணி துணை அமைப்பாளர் சதாம் மற்றும் கழக நிர்வாகிகள் ஐயப்பன், கனகசபை, செந்தாமரைக்கண்ணன், மகேந்திரன், பழனி, பாஸ்கரன், பூபதி உள்ளிட்ட பி.எல்.ஏ-2, பி.டி.ஏ., முகவர்கள் கலந்து கொண்டனர்.



