மதுரை, ஆகஸ்ட் 21 –
மதுரை கோட்ட ரயில்வே அலுவலகத்தில்ரயில் கட்டணம் தவிர்த்த வருவாயைப் பெருக்க ஒப்பந்ததாரர்களுடன் ஆலோசனை கூட்டம் ரயில்வே கோட்ட மேலாளர் ஓம் பிரகாஷ் மீனா தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மேலாளர் பேசுகையில் ரயில்வே துறை வருவாயை பெருக்க ஒப்பந்ததாரர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும். ரயில் கட்டணம் தவிர்த்த வருவாயைப் பெருக்க மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, இராமநாதபுரம், காரைக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் ஜவுளிக்கடைகள், தோல் பைகள், தானியங்கி, நாப்கின் விற்பனைகள், ராமேஸ்வரத்தில் ரயில் பெட்டி தங்கும் அறைகள், மொபைல் போன் கருவிகள் எழுது பொருள்கள், பூங்கொத்து, பொம்மைகள் விற்பனை, கண் கண்ணாடி மற்றும் கைக்கடிகாரம் விற்பனைகள் மற்றும் கங்கைகொண்டான், மீளவிட்டானில் சிற்றுண்டி கடைகள் அமைப்பது போன்ற 70 சேவைகள் மூலம் ரயில்வே வருவாயை பெருக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் ரூபாய் ஏழு கோடி வருமானம் ஈட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்.
மேலும் இது பற்றிய விவரங்கள் அரிய https://www.ireps.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் முதுநிலைக் கோட்ட வர்த்தக மேலாளர் டி.எல். கணேஷ், கோட்ட வர்த்தக மேலாளர்
டி. மோகனப்பிரியா உட்பட 20 க்கும் மேற்பட்ட விளம்பரப்பிரிவு மற்றும் ஒப்பந்ததாரர்கள் கலந்து கொண்டனர்.


