தஞ்சாவூர் ஜூன் 3.
இந்தியா கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலர் முத்தரசன் கூறினார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் தஞ்சையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார் அப்போது அவர் கூறியதாவது:
தேர்தலுக்குப் பிந்திய கருத்து கணிப்பு என்பது மோடி கூறியது ஊடகங்கள் கூறியுள்ளது. மோடி 400 இடங்கள் என கூறினார் .அதில் சில குறைந்துள்ளது. மோடியின் விருப்பத்தை ஊடகங்கள் நிறை வேற்றி உள்ளன. 4 தேதிக்கு பிறகு உண்மை என்னவென்று தெரியும் அதுவரை பொறுத்திருப்போம் பிரதமர் மோடி எத்தனை கிலோமீட்டர் பயணம் செய்தார் எத்தனை பொதுக்கூட்டங்களில் பேசினார் ,என்பதெல்லாம் சாதனையாக பேசப்படுகிறது, ஆனால் இவ்வளவு தூரம் பிரச்சாரம் செய்தவர் கடந்த 10 ஆண்டுகளில் தான் செய்த சாதனைகள் பற்றி பிரச்சாரம் செய்யவில்லை. 2014, 2019 ஆண்டுகளில் கொடுத்த வாக்குறுதிகள் பற்றி எங்கும் பேசவில்லை.
மாறாக மக்களின் கருத்தை திசை திருப்பும் வகையில் மத, ஜாதி ரீதியான பிரச்சினைகளை பேசினார். இதுவரை இந்த நாட்டில் எந்த ஒரு பிரதமரும் இப்படிப்பட்ட பேச்சுகளை பேசவில்லை. இவ்வள வுக்கு காரணம் என்னவென்றால் தோற்றுப் போகிறோம் என்பதால் தான்.
தோல்வி உறுதியான நிலையில் இப்படிப்பட்ட அருவருக்கத் தக்க பய பேச்சுக்களை மோடி பேசி உள்ளார் இந்த பிரச்சாரத்தின் மூலம் மக்கள் ஏமாந்து விட மாட்டார்கள் என உறுதியாக நம்புகிறோம் .நிச்சயம் இந்தியா கூட்டணி வெற்றி பெறும் என்ற நம்பிக்கை உள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் மோடி மேற்கொண்ட பிற பிரச்சாரங்கள் குறித்து பொதுமக்களிடம் கடும் விமர்சனம் உள்ளது தமிழ்நாட்டுக்கு வந்த போது ஒருவித பிரச்சாரத்தை யும், வட மாநிலங்களுக்கு சென்ற போது ஒருவிதமான பேசினார். பின்னர் அந்தப் பிரச்சாரம் போதவில்லை என்பதால் நான் தியான மேற்கொள்கிறேன் எனக்கூறி குமரி முனையில் விவேகானந்தர் பாறையில் வந்து தியானம் செய்தார்.
தியானம் என்பது அமைதியான நடை பெற வேண்டிய ஒன்று. ஆனால் டெல்லியில் இருந்து வந்ததிலிருந்து ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் அவர் கோவிலில் வழிபடுவது, காவி உடை அணிந்து ருத்ராட்சம் உருட்டுவது என்று ஒவ்வொன்றையும் பத்திரிக்கையா ளர் மூலம் படம்பிடித்து அனைத்தும் வெளியானது.
இதிலிருந்து இந்த தியானம் என்பது எவ்வளவு போலித்தன மானது என்று தெரிகிறது. அவர் மக்களை ஏமாற்றுகிறார் வாரணாசி தேர்தலில் இது பயன்படும் என்று செயல்பட்டுள் ளார் .