சேலம், ஆகஸ்ட் 22 –
சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி பேரூராட்சி ஒன்டிக்கடை சமுதாய கூடத்தில் நடைபெற்ற முகாமை வட்டாட்சியர் கூட்டுறவு சார் பதிவாளர் அலுவலர்களுடன் சேலம் கிழக்கு மாவட்ட துணைச் செயலாளர் பாரப்பட்டி க. சுரேஷ்குமார் துவக்கி வைத்து பார்வையிட்டார்.
இந்நிகழ்ச்சியில் பனமரத்துப்பட்டி ஒன்றிய செயலாளர் க. உமாசங்கர், பேரூர் நகர செயலாளர் ரவிக்குமார், பேரூர் அவைத் தலைவர் பார்த்திபன், பேரூராட்சி தலைவி பரமேஸ்வரி வருதராஜ், துணைத் தலைவர் பிரபு கண்ணன், வார்டு கவுன்சிலர்கள், வார்டு செயலாளர்கள், அரசு உயர் அதிகாரிகள், கிளை செயலாளர்கள், சார்பணி நிர்வாகிகள், கட்சி முன்னோடிகள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.



