கருங்கல், ஆக. 16 –
கருங்கல் அருகே மாத்திரவிளையில் பிரசித்தி பெற்ற புனித ஆரோபண அன்னை ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் 590-வது பாதுகாவல் பெருவிழா கடந்த 6-ம் தேதி தொடங்கியது. 10-ம் நாளான காலை 11 மணி முதல் இரவு 8 மணி வரை அன்னையின் தேர் பவனி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிகளுக்கு குழித்துறை மறை மாவட்ட ஆயர் ஆல்பர்ட் அனஸ் தாஸ் தலைமை தாங்கி மறையுரை ஆற்றினார். திருப்பலி முடிவில் ஆலயத்தின் சார்பில் ஏழைகளுக்கு இலவச வீடு மற்றும் திருமண நல உதவிகள் போன்றவை வழங்கப்பட்டன.



