ஊத்துக்குளி, ஆக. 16 –
தமிழ்நாடு வணிகர் சங்க பேரவை சுதேசி நாயகன், தா. வெள்ளையன் அவர்கள் நல்லாசியுடன் மாநிலத் தலைவர் டைமண்ட் ராஜா தேசியக்கொடி ஏற்றினர்.
கலை நிகழ்ச்சிகளுடன் நிகழ்ச்சி ஆரம்பிக்கப்பட்டது. பேச்சுப்போட்டிகள் குழந்தைகளுக்கு பரிசு பொருட்களும் இனிப்புகளும் வழங்கப்பட்டன.
திருப்பூர் ஒருங்கிணைந்த மாவட்ட தலைவர் ராஜேந்திரன், மாவட்ட செயலாளர் கல்யாண சுந்தரம், பொருளாளர் சௌந்தர் ராஜன், தெற்கு மாவட்ட தலைவர் ஏ1. பொன்னுச்சாமி, செயலாளர் நெல்லை கணேஷ், பொருளாளர் தியாகராஜன் மற்றும் விஜய் டிவி புகழ் பிரபு, சுதந்திர போராட்டத்தில் தியாகிகள் நம் நாட்டிற்கு சுதந்திரத்தை பெற்றுக் கொடுத்ததை பாடலாக பாடி குழந்தைகளுக்கு பொது அறிவுகள், விழிப்புணர்வுகள் ஏற்படும் வகையில் உரையாற்றினார்.
மாவட்ட தலைவர் செந்தில்குமார், செயலாளர் சதீஷ்குமார், மாவட்டத் துணைத் தலைவர் பொன்னுச்சாமி, கௌரவ தலைவர் மோகன் மற்றும் நிர்வாகிகள், பள்ளி குழந்தைகள், ஆசிரியர்கள் அனைவரும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



