கோவை, ஆக. 15 –
அலையன்ஸ் கிளப் ஆப் பொள்ளாச்சி மின்னல் சார்பில் கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருள்மிகு மாரியம்மன் திருக்கோவிலில் சுதந்திர தினத்தை போற்றும் வகையில் சுமார் 10,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட பட்டைய ஆளுநர் மின்னல் சீனிவாசன் அவர்களின் ஏற்பாட்டில் நடைபெற்ற விழாவில் சிறப்பு விருந்தினர்களாக முன்னாள் நகர மன்ற தலைவர் கிருஷ்ணகுமார், நகர மன்ற உறுப்பினர் ஜேம்ஸ் ராஜா ஆகியோர் கலந்து கொண்டனர்.
மாவட்ட ஆளுநர் காளியப்பன் துணை ஆளுநர்கள் அரங்கநாதன், அருண்குமார், ஸ்வீட் முருகானந்தம் மற்றும் இணை செயலாளர் ரகுராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் அலையன்ஸ் பன்னாட்டு இயக்குனர் மகேஷ் குமார், தலைவர் செல்வமணிகண்டன், செயலாளர் அருண் கிருஷ்ணன், செயலாளர் அமுத சேகரன், பொருளாளர் ராமமூர்த்தி, மக்கள் தொடர்பு அலுவலர் முனைவர் அபு. இக்பால் மற்றும் அலையன்ஸ் சங்க பொறுப்பாளர்கள் உறுப்பினர்கள், பொதுமக்கள் என பெருந்திரளாக கலந்து கொண்டனர்.



