தேனி, ஆக. 11 –
நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் ஜி. கல்லுப்பட்டி ஆர்.டி.யு. மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமில் தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ரஞ்ஜீத் சிங் கலந்து கொண்டு பார்வையிட்டார். பெரியகுளம் சட்டமன்ற உறுப்பினர் கே.எஸ். சரவணக்குமார் முன்னிலையில் பார்வையிட்டு, கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஊட்டச்சத்துப் பெட்டகங்களை வழங்கினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் உங்கள் குடும்பத்தின் நலன் அரசின் பொறுப்பு என்ற நோக்கத்தின் அடிப்படையில் நலம் காக்கும் ஸ்டாலின் பன்னோக்கு உயர் சிறப்பு மருத்துவ முகாமினைதொடங்கி வைத்தார்கள். அதனடிப்படையில் தேனி மாவட்டத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் வட்டாரத்திற்கு மூன்று வீதம் மொத்தம் 24 மருத்துவ முகாம் ஒவ்வொரு சனிக்கிழைமையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இம்முகாமில் இரத்தபரிசோதனை மற்றும் இரத்த அழுத்த பரிசோதனை, பொது மருத்துவம், பொது அறுவை சிகிச்சை, எலும்பு மருத்துவம், மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவம், குழந்கைள் நல மருத்துவம், இருதய மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் மருத்துவம், பல் மருத்துவம், கண் மருத்துவம், காது, மூக்கு தொண்டை மருத்துவம், மனநல மருத்துவம், இயன்முறை மருத்துவம், கதிரியக்கவியல் மருத்துவம், நுரையீரல் மருத்துவம், சர்க்கரை நோய் மருத்துவம், இந்திய மருத்துவம் (ஆயுர்வேதம், சித்தா, யுனானி, யோகா, ஹோமியோபதி) ஆகிய 17 வகையான துறை சிறப்பு மருத்துவர்கள் மூலமாக மருத்துவ சேவைகள் வழங்கப்பட்டுள்ளது.
இம்முகாமில் பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன், இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) அன்புசெழியன், அரசு தேனி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு. முத்துசித்ரா, பெரியகுளம் வட்டாட்சியர் மருதுபாண்டி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.



