தேனி, ஆக. 11 –
தேனி மாவட்டம் பெரியகுளம் ஸ்டேட் பேங்க் பிரிவில் அமைந்திருக்கும் எம்கேஎஸ் புதிய சட்ட அலுவலகத்தை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ். அமல்ராஜ் அவர்கள் புதிய அலுவலகத்தை குத்துவிளக்கு ஏற்றி திறந்து வைத்தார். இந்நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் துணைத் தலைவர் அசோக், பார் கவுன்சில் உறுப்பினர் தாழை முத்தரசு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். விழாவிற்கு வழக்கறிஞர்கள் முத்துகிருஷ்ணன், காமாட்சி (எ)கரிகாலன், பாரதிராஜா, சுதாகர், சசிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இந்நிகழ்வில் வழக்கறிஞர்கள் சங்கம் பெரியகுளம் சார்பாக தலைவர் எம். காமராஜ், செயலாளர் சுதாகரன்,பொருளாளர் ரத்தினவேல் பாண்டியன், மூத்த வழக்கறிஞர்கள் தாமரைச்செல்வம், தவமணி, பொன்மொழி, குமரகுருபரன், சக்திவேல், ஜெயராமன், பாலாஜி, முத்துராமலிங்கம், சுசி தமிழ்பாண்டி, ஆதிசுவரன், பாண்டியராஜன், மகாராஜன், திருமதி சிந்து, செல்லப்பாண்டி, ஜெயபிரசாத், நாகப்பாண்டி, முருகேசன் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் விஷ்ணு,அன்ன காமாட்சி, ஆனந்த், பரமேஸ்வரன், நிதிஷ் மற்றும் ஏராளமான வழக்கறிஞர்கள் இவ்விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.



